நீண்ட நாளின் பின்...,( கவிதை )
நீண்ட நாளின் பின்...,( கவிதை )
நீண்ட நாளின் பின்
நித்திரையின்றி உன்
நினைவுகள் என்னும்
நிழல் ஆடுகையில்
உன் குரல் கேட்டு விடும்
ஆசையில் உனக்கு ஒரு
தொலைபேசி அழைப்பு
தவறென்றால் மன்னித்து
விடு என் நினைவில்
நீ என்றும் உனக்காய்
காத்திருப்பேன் காலம்
முழுதும் கரை படியாத
உன் அழகிய
நினைவுகளோடு..,
கவிதை எழுதியவர் - அக்குறணை லஷாட்
நீண்ட நாளின் பின்...,( கவிதை )
Reviewed by Google தமிழச்சி
on
December 07, 2019
Rating: